தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

நயன் என்ட்ரி

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என ரசிகர்கள் அவரை அழைக்கத் தொடங்கிவிட்டனர். அந்த அளவிற்கு அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார் நயன். முதன்முதலில் ‘மனசினக்கரே’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமான நயன்தாரா, அதன்பிறகு தமிழில் ‘ஐயா’ படத்தின் மூலம் அறிமுகமானார். பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவர், தற்போது பிஸியான நடிகையாக வலம் வருகிறார்.

தடுப்பூசி

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருவதையடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது. அரசியல் தலைவர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் தடுப்பூசி போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இஅந்த வகையில், பிரபல நடிகை நயன்தாரா சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருடன் இயக்குநர் விக்னேஷ் சிவனும் கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டார். இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here