இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தவிர்க்க முடியாத காரணங்களுக்காக வெளியில் சென்றாலும் தனி மனித இடைவெளியை மக்கள் கடைபிடிக்க வேன்டுமென கேட்டுக் கொண்டார். மேலும் அவர் பேசுகையில்; முகக்கவசம் அணியுங்கள், முகக்கவசத்தை மூக்கு, வாய் மூடி உள்ளபடி முழுமையாக பயன்படுத்துங்கள். மருத்துவமனை, பேருந்து பயணம், கடைகளுக்கு செல்லும்போது, தொழிற்சாலை மற்றும் அலுவலங்களில் பணிபுரியும்போது  இரண்டு முகக்கவசம் பயன்படுத்துங்கள். இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள். நோய்த்தொற்றில் இருந்து நம்மை காக்கவும், மீட்கவும் உள்ள மிக மிக முக்கியமான கவசம் தடுப்பூசி தான். இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here