‘நவம்பர் ஸ்டோரி’ வெப் தொடரில் நடிப்பது மிகவும் மகிழ்ச்சி அளிப்பதாக நடிகை தமன்னா தெரிவித்துள்ளார்.

‘நவம்பர் ஸ்டோரி’

கொரோனா பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ளதால், மக்கள் OTT பக்கம் திரும்பியுள்ளனர். முக்கிய ஹீரோக்களின் திரைப்படங்கள் நேரடியாக OTT தளங்களில் வெளியாக தொடங்கி இருக்கின்றன. OTT தளங்கள் பல பிரத்யேக வெப் சீரிஸ்களையும் உருவாக்கி வெளியிட்டு வருகின்றன. அந்த வரிசையில், ராம் சுப்பிரமணியன் இயக்கத்தில் உருவாகும் ‘நவம்பர் ஸ்டோரி எனும் புதிய வெப் தொடர்’ மே 20-ம் தேதி . டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த வெப் தொடரில், நடிகை தமன்னா, பசுபதி, ஜி.எம்.குமார், விவேக் பிரசன்னா, அருள்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கொலை வழக்கில் சிக்கும் தந்தையை காப்பாற்ற போராடும் கதாநாயகி, என்ன என்ன மாதிரியான பிரச்சனைகளை சந்திக்கிறார் என்பதை மையமாக வைத்து இந்த வெப் தொடர் உருவாக்கப்பட்டுள்ளது. க்ரைம் திரில்லர் தொடராக வெளிவரும் ‘நவம்பர் ஸ்டோரி’, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெறும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

தேடியது கிடைத்தது

‘நவம்பர் ஸ்டோரி’ குறித்து பேசிய நடிகை தமன்னா, வெப் தொடரில் தான் தேடிக்கொண்டிருந்த இரண்டு விஷயங்கள் ‘நவம்பர் ஸ்டோரி’ கதையுடன் ஒத்துப்போனதாக தெரிவித்துள்ளார். இந்த வெப் தொடரில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். மே 20-ம் தேதி தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ‘நவம்பர் ஸ்டோரி’ வெளியாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here