நடைபெற்று முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் 159 இடங்களில் வெற்றி பெற்றது. அதில் திமுக மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது. இதனையடுத்து நேற்று நடைபெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் சட்டமன்றத் தலைவராக மு.க. ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதற்கான கடிதத்தை இன்று காலை ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலின் வழங்கினார். அப்போது ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரினார். இதை கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஏற்றுக்கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here