செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வார்டில் இருந்த நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்குவதில் பற்றாக்குறை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் 5 நோயாளிகள் உயிரிழந்தனர். பின்னர் ஆக்சிஜன் கிடைக்காமல் மூச்சு திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து 13 நோயாளிகள் உயிரிழந்தாக கூறப்படுகிறது. இதனையடுத்து மருத்துவமனைக்கு வந்த மாவட்ட ஆட்சியர் ஜான்லூயிஸ், நோயாளிகள் இறப்பு குறித்தும், ஆக்சிஜன் இருப்பு பற்றியும் அங்குள்ள மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் நோயாளிகள் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணம் இல்லை என்றும் போதுமான ஆக்சிஜன் இருப்பு உள்ளதாகவும் கூறினார். நோயாளிகளின் இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here