தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகரான பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா ஆகியோர், கொரோனா பாதிப்பால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அவர்கள் இருந்து வந்த நிலையில், இன்று அதிகாலை பாண்டு உயிரிழந்தார். அவரது மனைவி குமுதாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நடிகர் பாண்டுவின் திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here