தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘கர்ணன்’ திரைப்படம் திட்டமிட்டபடி இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது.

‘கர்ணன்’

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘கர்ணன்’. ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இத்திரைப்படம், தமிழக அரசு விதித்த கொரோனா காட்டுப்பாடுகள் காரணமாக ரிலீஸ் ஆகுமா? ஆகாதா? என்ற கேள்வி எழுந்தது. எனினும், திட்டமிட்டபடி ‘கர்ணன்’ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு நேற்று அறிவித்தார். தமிழக அரசின் அறிவிப்பின்படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிடப்படும் கர்ணன் படத்திற்கு பேராதரவை தருமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

கொண்டாட்டம்

அதன்படி ‘கர்ணன்’ திரைப்படம் இன்று திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. அதிகாலையிலேயே தியேட்டர்கள் முன்பு குவிந்த ரசிகர்கள் ஆட்டம் பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கு வைக்கப்பட்டுள்ள பல அடி உயர கட்-அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்ததுடன், மலர்களையும் தூவினர். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் திரையரங்குகளில் ரசிகர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here