பிக்பாஸ் புகழ் பாலாஜி முருகதாஸூம் தானும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் என நடிகை யாஷிகா ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார்.

கிசுகிசு

”இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். அப்படத்தில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். அதனைத்தொடர்ந்து பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பிரபல நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன்-2வில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். ஏற்கனவே நடிகர் மகத்தை காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளிவந்த நிலையில், அதனை திட்டவட்டமாக யாஷிகா மறுத்தார். தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வருகிறார்.

விளக்கம்

இந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற பாலாஜி முருகதாஸூடன் யாஷிகா இணைந்து இருப்பது போன்ற புகைப்படம் வலைத்தளத்தில் வெளியானது. இதனால் இருவரும் காதலிப்பதாக பேசப்பட்டது. இதற்கு விளக்கம் அளித்துள்ள யாஷிகா ஆனந்த், “நாங்கள் இருவரும் நண்பர்களாக மட்டுமே பழகினோம் என்றும் அவரது வளர்ச்சியால் சந்தோஷப்படுகிறேன் என்றும் கூறியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here