பிக்பாஸ் சீசன் 4ல் போட்டியாளராக பங்கேற்றிருக்கும் நடிகை ஷிவானி ரசிகர்களை ஏமாற்றிவிட்டதாக நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகின்றனர்.

ரசிகர்கள் ஆர்வம்

சின்னத்திரையில் நடிகையாக அறிமுகமான ஷிவானி நாராயணன், தனது நடிப்பால் ஏராளமான ரசிகர்களின் மனதில் இடம்பெற்றார். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு மிகவும் பிரபலமானார். ஷிவானி வெளியிடும் புகைப்படங்களை பார்ப்பதற்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வமானார்கள்.

கலாய்க்கும் நெட்டிசன்ஸ்

இந்த நிலையில், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக ஷிவானி கலந்து கொண்டிருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் நாளே ஷிவானியை வைத்து சமூக வலைத்தளத்தில் நெட்டிசன்ஸ் ட்ரோல் செய்து வருகிறார்கள். குறிப்பாக லாக்டவுனில் அவர் வெளியிட்ட புகைப்படங்களில் ஒல்லியாக இருந்ததாகவும், தற்போது டி.வி.யில் பார்க்கும்போது மிகவும் குண்டாக இருப்பதாகவும் ட்ரோல் செய்கிறார்கள். இவ்வளவு நாள் எடிட் செய்த போட்டோவை போட்டு ஷிவானி ஏமாற்றிவிட்டதாக ரசிகர்கள் பகிர்ந்து வருகிறார்கள். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here