பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் மறைவுக்கு கிரிக்கெட் வீரர் டெண்டுல்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

எஸ்.பி.பி. மரணம்

உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், 50 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சை பெற்றார். இந்நிலையில், நேற்று பிற்பகல் 1 மணியளவில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். எஸ்.பி.பி.யின் மறைவுச் செய்தி, திரையுலகிரையும், ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியது. தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதிலும் உள்ள இசை ரசிகர்களை சோகத்தில் ஆழ்ந்தனர்.

சச்சின் இரங்கல்

அந்த வகையில், இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், எஸ்.பி.பி. மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் கூறியிருப்பதாவது; ’எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் இசையைக் கேட்பது எப்போதும் எனக்கு பிடிக்கும். அவரது மறைவால் ஆழ்ந்த வருத்தம். சாகர் திரைப்படத்தில் இடம்பெற்ற அவருடைய ‘சச் மேரே யார் ஹை’ பாடல் எனது பிளேலிஸ்ட்டில் நான் எப்போதும் வைத்திருக்கும் எனக்கு பிடித்த பாடல்களில் ஒன்று. அவரது ஆத்மா நிம்மதியாக ஓய்வெடுக்கட்டும். அவரது குடும்பம் மற்றும் நண்பர்களுக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். இவ்வாறு டெண்டுல்கர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here