‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் 4-வது சீசன் விரைவில் தொடங்க உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதற்காக 2 நடிகைகள் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக தெரிகிறது.

பிக் பாஸ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசன்களையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சிக்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. நடிகர் கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள்? யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள்? என ரசிகர்கள் மத்தியில் கேள்விகளும், குழப்பங்களும் இருந்து கொண்டே இருந்தது.

தனிமையில் பிரபலங்கள்

வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் இருந்து ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று கூறப்படுகிறது. இதில் யார் யார் எல்லாம் பங்கேற்க போகிறார்கள் என்ற ஆவல் மக்களிடையே எழுந்துள்ள நிலையில், நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் சில பிரபலங்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன. கேப்ரில்லா, ரியோ ராஜ், ஷிவானி நாராயணன், ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், அனு மோகன் போன்றோரின் பெயர்கள் பிக் பாஸ் லிஸ்ட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப் போகும் பிரபலங்களுக்கு கடந்த வாரம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. அதில் இரண்டு பிரபலங்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால், அவர்கள் போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. மற்ற போட்டியாளர்கள் அனைவரும் தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. ரம்யா பாணியனும், ஷிவானியும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதால், அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வது உறுதி என தகவல்கள் வெளிவந்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here