நடிகை சாய் பல்லவி தான் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை எனக்கூறி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளார்.

வெற்றி நாயகி

பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி, அப்படம் கொடுத்த அறிமுகம் பல மொழிகளில் அவருக்கு மிகப்பெரிய அடையாளத்தை பெற்றுத் தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில், மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியடைந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய்பல்லவி, மற்ற நடிகைகளை விட கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார். தமிழில் சூர்யாவுடன் என்.ஜி.கே., தனுஷூடன் மாரி 2 படங்களில் அவர் நடித்துள்ளார். தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்து வரும் ‘விராட்ட பர்வம்’ படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது இவர் நானியுடன் இரண்டாம் முறையாக மீண்டும் இணைகிறார். 2017 ஆம் ஆண்டு வெளியான ‘மிடில் கிளாஸ் அப்பாயி’ என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக நடித்திருந்தார் சாய் பல்லவி. ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக வெளிவந்த ‘மிடில் கிளாஸ் அப்பாயி’, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று, சுமார் 100 கோடியை வசூலித்து மிகப்பெரிய ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் அதிர்ச்சி

தொடர்ந்து சினிமாவில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவி தணது திருமணம் குறித்து எடுத்திருக்கும் முடிவை கூறி ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறார். திருமணம் செய்து கொண்டால் பெற்றோரை பிரிந்து கணவர் வீட்டுக்கு செல்ல வேண்டி இருக்கும், அதனால் தான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்றும், பெற்றோரை நன்றாக பார்த்துக் கொள்வேன் என்றும் சாய் பல்லவி கூறி இருக்கிறார். திருமணம் பற்றி சாய் பல்லவி இப்படி ஒரு முடிவு எடுத்திருப்பது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இருப்பினும் வருங்காலத்தில் அவர் தன்னுடைய முடிவை மாற்றிக் கொள்வார் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here