இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி தற்போது தயாரித்து வரும் திரைப்படத்தை நேரடியாக டிவியில் வெளியிடப் போவதாக தகவல் வெளிவந்துள்ளது.

OTTயில் ரிலீஸ்

கடந்த 6 மாதங்களாக கொரோனா பிரச்சனை அனைவரையும் ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளும் பெருமளவு வீழ்ச்சியை சந்தித்துள்ள நிலையில், சினிமா துறையிலும் எந்த வேலைகளும் நடக்காமல் முடங்கிப் போய் இருந்தது. தியேட்டர்கள் மூடப்பட்டதால் முடிக்கப்பட்ட படங்களைக் கூட வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவித்து வந்தனர். அதனால் OTT தளத்தில் பல படங்கள் வெளியாகின. அதற்கு தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்ததுள்ளது. ஆனால், அதையும் தாண்டி தற்போது சூர்யாவின் சூரரைப்போற்று, விஷாலின் சக்ரா, விஜய் சேதுபதியின் கா/பெ. ரணசிங்கம் போன்ற பல திரைப்படங்கள் OTTயில் வெளியாக தயாராக இருக்கிறது. முன்னணி நடிகர்கள் பலரும் தங்களின் படங்களை OTT தளத்தில் வெளியிடுவதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

டிவியில் ரிலீஸ்?

பெருமளவில் இப்பிரச்சனைகள் இருக்கும் சூழலில், இதற்கு ஒரு படி மேலே போன இயக்குநரும், நடிகருமான சுந்தர்.சி, தான் தயாரிக்கும் புதிய படத்தை நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முத்துன கத்திரிக்கா, மீசைய முறுக்கு, நட்பே துணை, நான் சிரித்தால் போன்ற பல படங்களை தயாரித்த சுந்தர்.சி, இப்போது “மாயா பஜார்” என்ற கன்னட திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கை தயாரித்து வருகிறார். அப்படத்தின் படப்பிடிப்பு படுவேகமாக நடந்து வருகிறது. வீராப்பு, தம்பிக்கு இந்த ஊரு, தில்லு முல்லு போன்ற திரைப்படங்களை இயக்கிய பத்ரி இப்படத்தை இயக்குகிறார். “மாயா பஜார்” படத்தில் பிரசன்னா, ஷாம், யோகிபாபு, விடிவி கணேஷ், ரித்திகா சென் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் வரும் தீபாவளிக்கு நேரடியாக டிவியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சன் நெக்ஸ்ட் OTT தளத்தில் வெளியிட உள்ளதாகவும், அதே சமயத்தில் சன் டிவியில் ரிலீஸ் செய்யப் போவதாகவும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here