பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக வெளியான செய்தியில் உண்மையில்லை என பிரபல நடிகைகள் நண்பரும், நடனக் கலைஞருமான கருன் ராமன் விளக்கம் அளித்துள்ளார்.

‘பிக் பாஸ்‘

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்கள் அனைவராலும் அதிகம் விரும்பிப் பார்க்கும் நிகழ்ச்சி பிக் பாஸ். மூன்று மாதங்கள் நடக்கும் இந்த நிகழ்ச்சியை பார்ப்பதற்கு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. அதுமட்டுமின்றி நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருவது இன்னும் சிறப்பைப் பெற்று வருகிறது. கடந்த மூன்று சீசனையும் மிக வெற்றிகரமாக நடத்தி முடித்திருக்கும் விஜய் டிவி, தற்போது அடுத்த சீசனுக்கான பணிகளைத் தொடங்கி இருக்கிறது. பிக் பாஸ் சீசன் 4க்கான புரொமோ வீடியோக்கள் வெளியாகி, ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது. கமல்ஹாசன் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்து அனைவரையும் ஈர்த்தார். இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி எப்போது தொடங்கப் போகிறார்கள், யார் யாரெல்லாம் பங்கேற்கப் போகிறார்கள் என ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

விளக்கம்

இந்த நிலையில், பேஷன் நடனக் கலைஞரும், பிரபல ஒப்பனையாளருமான கருன் ராமன் பிக் பாஸ் 4ல் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியானது. இதையறிந்த அவர், தான் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கவில்லை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தனது அடுத்த திட்டம் அதைவிட பெரியது என்றும் அவர் கூறியுள்ளார். பிரபலங்கள் மத்தியில் மிகவும் பிரபலமான கருன் ராமன், நடிகைகள் திரிஷா, நயன்தாரா போன்ற பிரபலங்களுடன் நெருங்கிய தொடர்பு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here