இந்திப் படங்களில் நடிக்கை விருப்பமில்லை என சிலர் பேசுவதில் உண்மை இல்லை என்று நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்துள்ளார்.

உண்மையில்லை

இதுதொடர்பாக ஸ்ருதிஹாசன் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது; “நான் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிக்கிறேன். இந்தியிலும் நடித்துள்ளேன். எனக்கு தென்னிந்திய படங்களில் நடிக்கத்தான் ஆர்வம். இந்திக்கு வர விருப்பமில்லை என்று சிலர் கூறுவதில் எந்த உண்மையும் இல்லை. எல்லா மொழிப் படங்களிலும் நடிக்க ஆசை உள்ளது. இந்தி படங்களில் நடிக்கவில்லை என்பதால் எனக்கு வாய்ப்புகள் வரவில்லை என்றோ இந்தி படங்களை விட்டுவிட்டேன் என்றோ அர்த்தமல்ல.

ஆசைகள்

வாழ்க்கையில் அனைத்து விஷயங்களையும் கற்றுக்கொண்டு நிதானமாக பயணம் செய்ய வேண்டும் என்பதில் எனக்கு ஆசை அதிகம். இன்னும் புதிது புதிதாக கற்றுக்கொள்ள வேண்டும், புதிது புதிதாக ஏதாவது செய்ய வேண்டும். என்னை இன்னும் மெருகேற்றும் முயற்சிகளை செய்கிறேன். இன்னும் செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்றுதான் மனதில் தோன்றுகிறது.” இவ்வாறு நடிகை ஸ்ருதிஹாசன் தெரிவித்திருக்கிறார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here