சர்ச்சைக்கு பெயர் போன நடிகை மீரா மிதுன் தன்னைத்தானே இறந்துவிட்டதாக அறிவித்திருப்பது இணையதளவாசிகளை அதிர வைத்துள்ளது.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான மீரா மிதுன், தொடர்ந்து தமிழ் சினிமாவையும் முன்னணி நடிகர், நடிகைகளையும் விமர்சித்து வருகிறார். சூர்யா, விஜய் ஆகியோரை வம்பிழுத்து வந்த மீரா, அவர்களது மனைவிகள் குறித்து தகாத வார்த்தைகளால் பேசி, ரசிகர்களிடம் செமயாக வாங்கிக் கட்டிக்கொண்டார். மீரா மிதுனை நடிகர்கள் ஒரு பொருட்டாக நினைக்காததையடுத்து, சமீபத்தில் அவர் பிக் பாஸை கையில் எடுத்தார். எதைப்பற்றி, எப்படி, எப்போது பேசினால் ரீச் கிடைக்குமென்பதை நன்கு தெரிந்த மீரா மிதுன், ஒவ்வொரு சமயத்திலும் ஒவ்வொரு முன்னணி நடிகர்களை வம்பிழுப்பதை தனது வேலையாகவே கொண்டிருக்கிறார். ‘சூரரைப் போற்று’ திரைப்படம் பற்றிய பேச்சுக்கள் அடிபட்டுக் கொண்டிருந்தபோது சூர்யாவை பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருந்த மீரா, தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் நிலையில் கமலைப் பற்றி பேசத் தொடங்கினார். “பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்துவதற்கும், தீர்ப்பு கொடுப்பதற்கும் தங்களுக்கு எந்த தகுதியும் இல்லை மிஸ்டர் கமல்ஹாசன்” எனக் கூறி, சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.

டுவிட் பதிவால் பரபரப்பு

இந்த நிலையில், மீரா மிதுன் இறந்துவிட்டதாகவும், போஸ்ட்மார்ட்டம் பணிகள் நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கி விட்டதாகவும் அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து மீராவே இந்த பதிவை செய்தாரா? அல்லது அவரது டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டு யாரேனும் மர்ம நபர்கள் பதிவு செய்தார்களா? என்ற கேள்வியை நெட்டிசன்கள் எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here