சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,272க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஏற்ற இறக்கம்

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. கடந்த மார்ச் மாதம் வரையில் ரூ.30 ஆயிரத்திலேயே நீட்டித்து வந்த தங்கம் விலை, பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டதில் இருந்து எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு உயர்ந்தது. கிட்டத்தட்ட ரூ.43,000 வரை உயர்ந்து வரலாறு காணாத ஏற்றத்தை கண்ட தங்கம் விலை, மேலும் உயரும் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. தங்கத்தின் வரத்து குறைந்ததாலும், பொருளாதார வீழ்ச்சியாலும் தங்கம் விலை உயர்ந்ததாக கூறப்படுகிறது. மேலும் தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடு பக்கம் திரும்பினர். பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என மற்ற பலவற்றில் இருந்த முதலீடுகளையும் மாற்றி தங்கத்தில் முதலீடு செய்தனர்.

மீண்டும் விலை உயர்வு

இந்த நிலையில், தங்கம் விலை இன்று மீண்டு உயர்ந்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.39,272க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் ரூ.24 உயர்ந்து ரூ.4,909க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் 1 கிராம் வெள்ளியின் விலையானது 69.30க்கு விற்பனையான நிலையில், இன்று ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசுகள் குறைந்து ரூ.69.90க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.67,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here