‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் மீனவாக நடிக்கும் ஹேமா கர்ப்பமாக இருப்பதால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ள விஜய் டிவி, அதனை வருகிற 11ம் தேதி 3 மணி நேரம் தொடர்ச்சியாக ஒளிபரப்ப உள்ளது.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’

தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றாலே இல்லத்தரசிகள் மட்டும்தான் பார்ப்பார்கள் என்ற கண்ணோட்டம் மறைந்து, தற்போது இளைஞர்கள் கூட சீரியல்களைப் பார்க்கத் தொடங்கிவிட்டனர். மாமியார் கொடுமை, எப்போதும் அழுகை என்று இருந்து கொண்டிருந்த சீரியல்கள் அனைத்தும் ரொமான்ஸ், லவ், சென்டிமெண்ட், சண்டைக்காட்சி, பாடல் காட்சி என்று பல ரகங்களாக இருப்பதனால் எல்லோரும் சீரியல்களை ரசிக்கத் தொடங்கி உள்ளனர். கூட்டுக் குடும்பத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில், கூட்டுக் குடும்பத்தின் அவசியம் மற்றும் அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்படும் தொடர் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இத்தொடரில் ஸ்டாலின், சுஜிதா சித்ரா, குமரன், ஹேமா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜீவா மற்றும் கதிர் ஆகிய இருவரும் முறையே மீனா மற்றும் முல்லை ஆகியோரை திருமணம் செய்து கொள்கிறார்கள். இந்த ஜோடிகளுக்கு இடையிலான காதல் காட்சிகளுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. ‘பாண்டியன் ஸ்டோர்ஸில்’ மீனா கதாபாத்தில் நடிக்கும் ஹேமாவுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு உண்டு. ஆரம்பத்தில் நாடகத்தில் பார்ப்பவர்களை கோபப்படுத்தும் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஹேமா, தற்போது செல்ல மருமகளாக மாறினாள். தொடக்கத்தில் வில்லி போலவே ஹேமாவின் கதாபாத்திரம் இருந்தாலும், இப்போது குடும்பத்தில் ஒன்றிவிட்டது போல் கதையை காட்டத் தொடங்கிவிட்டனர்.

வளைகாப்பு விழா

எந்த ஒரு விசேஷம் நடந்தாலும் அதனை விஜய் டிவி தங்களது குடும்ப விழாவாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில், ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஹேமா கர்ப்பமாக இருப்பதனால் அவருக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. லாக்டவுன் சமயத்தை பல சீரியல் நடிகைகள் தங்களது குடும்ப வாழ்க்கையில் அதிகம் கவனம் செலுத்தி வந்தனர். ஒவ்வொரு நடிகைகளாக நிச்சயதார்த்தம், திருமணம் வளைகாப்பு, குழந்தை பிறப்பு என்று ஹேப்பி நியூஸை கொடுத்துக் கொண்டே இருக்கின்றனர். அந்த வகையில், வரும் 11ஆம் தேதி வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணி முதல் 10.30 மணி வரை தொடர்ச்சியாக ஹேமாவிற்கு வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றை நடத்த விஜய் டிவி திட்டமிட்டுள்ளது. வளைகாப்பு நிகழ்ச்சி குடும்ப நிகழ்ச்சியாகவே நடக்கவிருக்கிறது. சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் – ராஜலட்சுமி ஜோடி இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க உள்ளனர். அதுதொடர்பான புரொமோ வீடியோ தற்போது வெளிவந்து, சமூக வலைத்தளங்களில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த வீடியோவைப் பார்த்த ரசிகர்களும் பலர் தங்களது வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here