போதைப் பொருள் விவகாரம் தொடர்பாக பிரபல நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி வீட்டில் அதிகாரிகள் இன்று சோதனை நடத்தினர்.

போதைப் பொருள்

திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள் பழக்கம் இருப்பதாக கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டுமென்ற கோரிக்கையும் வலுக்கத் தொடங்கியது. இந்த நிலையில், மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போலீசார், கடந்த 29ம் தேதி பெங்களூருவில் நடத்திய அதிரடி சோதனையில், கன்னட டிவி நடிகை அனிகா மற்றும் கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த முகமது அனூப், பாலக்காட்டை சேர்ந்த ரவீந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 3 பேரும் கன்னட மற்றும் மலையாள சினிமாத்துறையை சேர்ந்தவர்களுக்கு போதைப் பொருட்களை சப்ளை செய்தது தெரியவந்தது.

அதிரடி கைது

இந்நிலையில், கன்னட பத்திரிக்கையாளரும், திரைப்பட இயக்குநருமான இந்திரஜித் லங்கேஷ், கன்னட திரையுலகில் போதை பொருள் பழக்கம் இருப்பதாகவும், அவர்கள் குறித்த விவரங்கள் தனக்கு தெரியும் என்றும் திடுக்கிடும் தகவலை வெளியிட்டார். மேலும் சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்திற்கு சென்ற அவர், கன்னட திரையுலகில் யார், யார் போதை பொருள் பயன்படுத்துகிறார்கள் என்ற விவரத்தையும் அளித்துள்ளார். இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்திய போலீசார், பிரபல நடிகை ராகினி திவேதி வீட்டில் அதிரடி சோதனை நடத்தியதுடன், அவரி கைதும் செய்தனர். மேலும் நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரியான சஞ்சனா கல்ராணிக்கும் இதில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டதையடுத்து, நேரில் ஆஜராகும்படி அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

அதிகாரிகள் சோதனை

இந்நிலையில், பெங்களுருவில் நடிகை சஞ்சனா கல்ராணியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக நடிகை ராகிணி திவேதி, அவரது நண்பர் ரவிஷங்கர், நடிகை சஞ்சனா கல்ராணியின் நண்பர் ராகுல், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த வீரேன் கண்ணா, ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த லோயம் பெப்பர் சம்பா ஆகிய 5 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது சஞ்சனா கல்ராணியின் வீட்டில் சோதனை நடத்தப்படுவதால் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது. நடிகை சஞ்சனா கல்ராணி தமிழில் பல படங்களில் நடித்த நிக்கி கல்ராணியின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here