இரு தினங்களுக்கு திருமணம் செய்துகொண்ட திருமணம் செய்துகொண்ட நடிகர் ஆரவ் தனது காதல் மனைவி குறித்து சமூக வலைத்தளத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

காதல் திருமணம்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓ காதல் கண்மணி, சைத்தான் ஆகிய படங்களில் நடித்துள்ள இவர், ‘மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ்.’ படத்தின் மூலம் கதாநாயகனார். தற்போது ‘ராஜபீமா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், ஆரவ்வுக்கு, கவுதம் மேனன் இயக்கும் ஜோஷ்வா படத்தில் ஹீரோயினாக நடித்துள்ள நடிகை ராஹிக்கும் சமீபத்தில் சென்னையில் திருமணம் நடைபெற்றது. ஆரவ்வும், ராஹியும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்களது திருமணம் நடைபெற்று உள்ளது. இந்த திருமண விழாவில் நெருங்கிய உறவினர்களும், பிக் பாஸ் பிரபலங்களும் கலந்துகொண்டனர்.

‘இமைபோல் காப்பேன்’

இந்த நிலையில், தனது காதல் மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ள நடிகர் ஆரவ், ‘இமைபோல் காப்பேன்’ என பதிவிட்டுள்ளார். ஆரவ்வின் இந்தப் பதிவிற்கு அவரது ரசிகர்கள் கமென்ட்ஸ்களை பதிவு செய்வதுடன், அதனை ஷேர் செய்தும் வருகின்றனர். இதனிடையே, ஆரவ்வை நடிகை ஓவியா காதலித்ததாக கூறப்பட்டது. ஆனால் அது உறுதிப்படுத்தப்படாத தகவலாகவே இருந்து வந்தது. இந்த நிலையில், நடிகர் ஆரவ் தான் காதலித்த பெண்ணையே கரம் பிடித்துள்ளார். ஆனால் இவர்களது திருமண விழாவில் நடிகை ஓவியா பங்கேற்கவில்லை. சமூக வலைத்தளங்களில் அகடிவ்வாக இருந்த நடிகை ஓவியா, சமீப காலமாக எங்கு இருக்கிறார்? என்ன செய்கிறார்? என்பது தெரியாமலேயே உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here