கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், தனது மனைவியுடன் ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமணநாளை கொண்டாடியுள்ளார்.

தீவிர சிகிச்சை

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரபல திரைப்பட பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம், சென்னை எம்.ஜி.எம். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு, ‘எக்மோ’ உள்ளிட்ட உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள் உதவியுடன், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அமெரிக்கா, பிரிட்டன் நாடுகளில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்திய மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகளுடன், மருத்துவக் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். எஸ்.பி.பிக்கு ‘பிசியோதெரபி’ அளிக்கப்பட்டு வரும் நிலையில், நுரையீரல் செயல்பாடு இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கான சிகிக்சைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

கேக் வெட்டி கொண்டாட்டம்

எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், இன்று தனது திருமண நாளையொட்டி எஸ்.பி.பி. தனது மனைவி சாவித்திரியுடன் ஐ.சி.யூ.வில் கேக் வெட்டி திருமண நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடியுள்ளார். இந்நெகிழ்ச்சியான நிகழ்வு மருத்துவர்கள், நர்ஸ்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here