மும்பைக்கு வரும் தன்னை முடிந்தால் தடுத்துப் பார் என சிவசேனா கட்சி எம்.பி.க்கு பிரபல நடிகை கங்கனா ரனாவத் பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

பரபரப்பு குற்றச்சாட்டு

பிரபல நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் தொடர்பாக நடிகை கங்கனா ரனாவத் சமூக வலைத்தளம் மூலம் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகிறார். பாலிவுட்டில் போதைப்பழக்கம், மாஃபியா, நெப்போடிசம் இருப்பதாக பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்த கங்கனா ரனாவத்திற்கு, சிலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்புகளும் வலித்து வருகின்றன. சினிமாவில் போதை பழக்கம் இருப்பதாக வெளியான தகவலையடுத்து, தற்போது அந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த நிலையில், கங்கனாவின் குற்றச்சாட்டுகளுக்கு சிவசேனா கட்சி எம்.பி. சஞ்சய் ராவ்த் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் கங்கனா மும்பைக்கு வரவேண்டாம் எனவும் கூறியிருக்கிறார்.

பகிரங்க சவால்

இதனை அறிந்த நடிகை கங்கனா அவருக்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார். இதுதொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், தான் மும்பைக்கு வரக்கூடாது என்று சிலர் மிரட்டல் விடுப்பதாக தெரிவித்துள்ளார். வருகிற 9ஆம் தேதியன்று மும்பைக்கு வருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும், விமான நிலையத்திற்கு வந்த பிறகு அதற்கான நேரத்தை பதிவிடுகிறேன் என்றும் கூறியுள்ளார். முடிந்தால் தன்னை தடுத்துப் பார் என்றும் அவர் பகிரங்க சவால் விடுத்துள்ளார். யார் எதிர்த்து பேசினாலும் அவர்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்து வரும் கங்கனா ரனாவத், மும்பை காவல்துறைக்கு எதிராக டுவிட் போட்டதாகவும், இது மும்பை காவல்துறையை அவமதிக்கும் செயல் என்றும் எம்.பி. சஞ்சய் ராவத் தெரிவித்திருக்கிறார். எனவே அவர் மும்பைக்கு வர வேண்டாம் என்று கூறியுள்ள நிலையில், சஞ்சய்க்கு கங்கனா ரனாவத் சவால் விடுத்துள்ள சம்பவம் மும்பையில் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here