விஜய் டிவி நடத்தும் ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சித்ரா இடம்பெறாதது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த சித்து

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் செல்ல மருமகளாக இருப்பவர் சித்ரா. முல்லை என்ற பெயரில் நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டவர். ‘சட்டம் சொல்வது என்ன’ என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமான சித்ரா, பின்னர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன், சீரியல்களிலும் நடித்தார். ‘சரவணன் மீனாட்சி’ சீசன் 2, வேலுநாச்சி போன்ற சீரியல்கள் மூலம் மிகவும் பிரபலமான அவர், தற்போது ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ தொடரில் முல்லை ஆக நடித்து அனைவரின் மனதையும் கொள்ளை கொண்டு வருகிறார். எப்பொழுதும் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சித்ரா, அன்றாடம் பல புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார். புடவையில் எந்த அளவிற்கு மங்களகரமாக இருக்கின்றாரோ, அதேபோல் மாடர்ன் உடைகளிலும் கலக்குவார். இவர் கட்டியிருக்கும் சேலையை பார்ப்பதற்காகவே பல ரசிகர்கள் உள்ளனர். சமீபத்தில் சித்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதை அறிந்து ரசிகர்கள், அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ரசிகர்கள் சோகம்

இந்நிலையில், விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் ஸ்டார் ஜோடிகள் நிகழ்ச்சியில் சித்ரா இடம்பெறாதது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து சித்ராவிடம் கேட்ட போது அவர் பதிலளிக்கையில்; “முதலில் அந்த நிகழ்ச்சியில் என்னை அழைத்தார்கள். நானும் நடனமாட ஆர்வமாகி தயாரானேன். ஆனால் கடைசி நேரத்தில், நீங்கள் இப்போது இதில் பங்கேற்பது சரியாக இருக்காது. உங்களுக்கான நேரம் கண்டிப்பாக வரும். இந்த நிகழ்ச்சியில் இப்போது நீங்கள் கலந்துகொள்ள முடியாததற்காக நாங்கள் வருத்தப்படுகிறோம் என்றனர். முதலில் இதைக்கேட்ட போது எனக்கு அதிருப்தியாக இருந்தது. இப்போது சரியாகிவிட்டது. எனது சொந்த முயற்சியில் நான் இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன். என்னை நினைத்து நான் எப்போதுமே பெருமை கொள்கிறேன்.” இவ்வாறு சித்ரா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here