கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் ஒரு வாரத்திற்குக்குள் முழுவதுமாக குணமடைவார் என நம்புவதாக அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு

லேசான கொரோனா தொற்று இருப்பதாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரபல பிண்ணனி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். பிறகு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததையடுத்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்து தனிமைப்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றார். அதன்பின் அவரது உடல்நிலை சற்று முன்னேற்றம் அடைந்ததாக கூறப்பட்ட நிலையில், திடீரென கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனால், திரையுலகினரும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, எஸ்.பி.பிக்கு செயற்கை சுவாசக்கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எக்மோ கருவி மூலமாகவும் அவருக்கு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

உடல்நிலை சீராக உள்ளது

எஸ்.பி.பி.யின் உடல் நிலை குறித்து அவரது மகன் எஸ்.பி.பி. சரண் தினமும் வீடியோ வெளியிட்டு வருகிறார்.
இன்று வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது; அப்பாவின் நுரையிரலில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பாடலுக்கு கால் அசைத்தார். எழுதவும் பாடவும் முயற்சி செய்தார். 2 நாட்களுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்குக்குள் உடல் நிலை முழுவதுமாக குணமடையும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு எஸ்.பி.பி.சரண் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here