நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு நீட் மற்றும் ஜேஇஇ தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என மாணவர்கள் உட்பட பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் நீட் தேர்வும், ஜேஇஇ தேர்வும் திட்டமிட்டபடி நடைபெறும் என தேர்வு முகமை தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பீதியில் மாணவர்கள் எப்படி தேர்வுகளை எதிர்கொள்ள போகிறார்கள் என கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது.

அமைச்சர் விளக்கம்

இந்த நிலையில், ஈரோடு மாவட்டம் ஆண்டிபாளையம் பகுதியில் நலத்திட்ட பணிகளை தொடக்கி வைத்த அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அரசு பள்ளிகளில் நடப்பு ஆண்டு அதிக மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறினார். கொரோனாவின் தாக்கம் குறைந்த பிறகே பள்ளிகள் திறப்பு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் 10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் நாளை முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழக அரசின் கொள்கை எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here