நடிகை வனிதா விஜயகுமாரின் 3வது கணவர் பீட்டர் பாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, கடந்த ஜூன் மாதம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்தன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வந்தனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது எனத் தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்புக் கேட்டு விலகினர். யூடியூப் நேரலையின் லட்சுமி ராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். தகாத வார்த்தைகளாலும் திட்டித் தீர்த்தார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவியது.

வார்த்தைப் போர்

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனைப் பார்த்துக் கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதனிடையே வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் வார்த்தைப் போர் மூண்டது. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இப்படி பல சர்ச்சைகளை சந்தித்து வந்த வனிதா, தான் நடத்தி வரும் யூடியூப் சேனலில் கவனத்தை திருப்பியதால், சமீப காலமாக அவரைப் பற்றிய பேச்சுகளும், கிசுகிசுக்களும் குறைந்தன.

மருத்துவமனையில் பீட்டர்

வனிதா – பீட்டர் பால் தம்பதியினர் சென்னை போரூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், பீட்டர் பாலுக்கு நேற்றிரவு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பீட்டர் பாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து நடிகை வனிதா மிகுந்த கவலையில் ஆழ்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here