துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாக வெளிவந்த தகவல் குறித்து அவர் தற்போது விளக்கமளித்துள்ளார்.

வதந்திகள்

‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் யாருடன் இணையப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இருந்து வந்தது. பலரும் துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கப் போவதாகக் கூறி வந்தனர். முன்னணி இயக்குநரான ஏ.ஆர். முருகதாஸின் படங்கள் அனைத்தும் பெருமளவில் பேசப்பட்டு, வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் கல்லா கட்டிவிடும். விஜய்யுடன் இவர் இணைந்த படங்களான துப்பாக்கி, கத்தி, சர்க்கார் ஆகிய படங்கள் விஜய் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து விஜய் முருகதாஸூடன், நான்காவது படத்தில் இணைய போவதாக ஒரு தகவல் வெளிவந்தது. அப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

துப்பாக்கி 2 இல்லை

இதுபற்றி இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் கூறுகையில்; பொதுவாகவே எந்த படத்தையும் இரண்டாம் பாகமாக வெளியிடுவதையும், எடுப்பதையும் நான் விரும்பமாட்டேன். ஒரு கதையின் தொடர்ச்சியாக ஒரு வட்டத்துக்குள்ளேயே அந்தக் கதை இருப்பதை நான் விரும்புவதில்லை. புதிதாக கதை இருந்தால் தான் படத்திற்கு நல்ல ஓப்பனிங்கு இருக்கும் என்பது என்னுடைய கருத்து. ஒரே கதையை அடைத்து வைத்து யோசிப்பது எனக்கு பிடிக்காது. அதைத் தாண்டி வேறொரு கதையை யோசிப்பது மட்டுமே என்னுடைய எண்ணமாக இருக்கும். துப்பாக்கி படத்தின் பெயரை கொடுக்கவில்லை என்று பல தரப்பிலும் வதந்திகள் வெளி வந்துகொண்டிருக்கின்றது. எதுவும் உண்மை இல்லை. பொய்யான தகவல்களை எப்பொழுதும் நம்ப வேண்டாம். தலைப்பை கொடுக்காததால் தான் சிக்கல் என்பதெல்லாம் கிடையாது. எந்த படத்தின் அப்டேட் ஆக இருந்தாலும் அது தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து முறையாக அறிவிப்பு வந்தால்தான் சரியாக இருக்கும். இவ்வாறு ஏ.ஆர். முருகதாஸ் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here