‘அஞ்சான்’ படத்திற்கு பிறகு எந்த வெற்றிப் படங்களையும் கொடுக்காமல் இருந்த இயக்குநர் லிங்குசாமி, தற்போது கே.ஜி.எஃப் ஹீரோவுடன் கைகோர்க்க இருக்கிறார்.

வெற்றி இயக்குநர்

‘ஆனந்தம்’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி அதன்பின் ரன், ஜி, சண்டக்கோழி, பீமா, பையா, வேட்டை உள்பட பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியவர் லிங்குசாமி. ஒரு காலத்தில் லிங்குசாமி என்றாலே வெற்றி என்ற அர்த்தத்தில் தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிக் கொண்டிருந்தனர். ஆனால், ‘அஞ்சான்’ என்ற படம் அவரது தலையெழுத்தையே மாற்றி அமைத்துவிட்டது. அதன்பிறகு லிங்குசாமியின் சினிமா கேரியர் அப்படியே டிராப் ஆகிவிட்டது. லிங்குசாமிக்கு மட்டுமல்ல, சூர்யாவின் கேரியருக்கும் அந்தப் படம் மிகப்பெரிய அடியாக அமைந்து. அதன்பிறகு சில படங்களை லிங்குசாமி இயக்கினாலும், அவை எதிர்பார்த்த அளவு வரவேற்பை பெறாமல் படுதோல்வியையே சந்தித்தது. கடைசியாக இயக்கிய ‘சண்டக்கோழி 2’ திரைப்படமும் வெற்றி பெறவில்லை.

மீண்டும் சாதிக்க தயாரான லிங்குசாமி

இந்த நிலையில், தன்னை நிரூபிக்கும் வகையில் தற்போது தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இரு மொழிகளிலும் ஒரே படத்தை இயக்க லிங்குசாமிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் கன்னட சினிமாவின் வசூல் மன்னனான கே.ஜி.எஃப். படத்தின் ஹீரோ யாஷூடன் அதிரடியாக களம் இறங்கிவிட்டார் லிங்குசாமி. கே.ஜி.எஃப். படத்தின் மூலம் உச்சம் தொட்ட நடிகர் யாஷை வைத்து தமிழ் மற்றும் கன்னடம் ஆகிய இருமொழிகளிலும் ஒரே நேரத்தில் ஒரு படத்தை இயக்க உள்ளார். இதனால் மீண்டும் ஒரு வெற்றியை பெற்று தமிழ் திரையுலகில் வெற்றி இயக்குநராக வலம் வர இருக்கும் லிங்குசாமி, ஒரு அதிரடி ஆக்ஷன் கதையை தயார் செய்து வைத்துள்ளாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here