மீரா மிதுனை கைது செய்யாவிட்டால், தீக்குளிக்கவும் தயாராக இருப்பதாக நடிகை ஜோதிகாவின் ரசிகை ஆவேசமாக கூறியுள்ளார்.

சர்ச்சை நாயகி

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான மீரா மிதுன் சர்ச்சைக்கு பெயர் போனவர். சமீபத்தில் ரஜினி, விஜய், சூர்யா, திரிஷா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற முன்னணி நடிகர், நடிகைகளைச் சீண்டி பரபரப்பை ஏற்படுத்தினார். தமிழ் சினிமாவில் சினிமா பின்புலம் உள்ளவர்களே அதிகம் என்றும் நெப்போடிசம், மாஃபியா போன்றவைகள் அனைத்தும் தலைவிரித்து ஆடுவதாகவும் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார். நெப்போடிசம் புரொடக்ட்ஸ் மட்டும்தான் முன்னணி நடிகர்களாக இருந்து வருகிறார்கள் எனத் தெரிவித்த அவர், ரஜினியை கன்னடர் என்றும் விஜய்யை கிறிஸ்துவர் என்றும் விமர்சித்தார். மேலும் நடிகர்கள் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரைப் பற்றி தரக்குறைவாக பேசி சர்ச்சையை உருவாக்கினார். தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களாக இருக்கும் சூர்யாவும், விஜய்யும் பற்றி மீரா மிதுன் பேசியதற்கு திரைத்துறையினரும், அவரது ரசிகர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

வழக்கு பதிவு

மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் பல பகுதிகளில் விஜய், சூர்யா ரசிகர்கள் காலவல் நிலையத்தில் புகார் அளித்து வந்தனர். மேலும் மீரா மிதுனின் உருவ பொம்மைகளையும் எரித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது ஒருபடி மேலே போய் மீரா மிதுன் மீது ஸ்ரீமதி என்பவர் சென்னை அம்பத்தூர் காவல் இணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில், தன்னை போன்ற பல பெண்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வரும் நடிகை ஜோதிகாவையும், அவரது கணவர் சூர்யாவையும் மீரா மிதுன் கேவலமாக பேசியுள்ளார். இதனால் ரசிகர்ள் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதால் அவர் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். நடிகை ஜோதிகாவிடம் மீரா மிதுன் மன்னிப்பு கேட்காவிட்டால், தான் தீக்குளிக்கவும் தயார் என்றும் ஸ்ரீமதி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here