புகைப்பிடிப்பது போன்ற புகைப்படத்தை வெளியிட்ட பிரபல நடிகை அமலா பாலை ரசிகர்கள் சரமாரியாக விமர்சித்து வருகின்றனர்.

திருமணம், விவாகரத்து

‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலா பால். அதன்பின் விஜய், அரவிந்த்சாமி, தனுஷ், ஜெயம்ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி மலையாளத் திரைப்படங்களிலும் அமலா பால் நடித்துள்ளார். இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதன்பின் மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். ‘ஆடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்ற அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார்.

சர்ச்சை புகைப்படங்கள்

நடிகை அமலாபால் சமீப காலமாக சமூக வலைத்தளத்தில் சர்ச்சையான புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். ஆண் நண்பர்களுடன் மதுகோப்பையுடன் இருப்பது போன்ற புகைப்படங்களையும், இன்னொரு ஆண் நண்பர் அருகில் நிற்க கடற்கரையில் படுத்திருப்பது போன்ற வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில், சமீபத்தில் புகைப்பிடித்து வாயில் இருந்து வரும் புகையை வட்டமாக விடுவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தினார். மேலும் “எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல் இல்லை. எல்லா புனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை. எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை” என்பது போன்ற தத்துவங்களையும் பதிவிட்டார். புகைப்பிடிப்பது போன்று படத்தை வெளியிட்ட நடிகை அமலாபாலுக்கு எதிராக, ரசிகர்கள் பலர் கடும் கண்டனப் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here