ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘செம்பருத்தி’ சீரியலில் ஏகப்பட்ட அரசியல் நடப்பதாக அதில் நடித்து வரும் நடிகை பரதா நாயுடு கண்ணீர் மல்க தெரிவிருக்கிறார்.

‘செம்பருத்தி’

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல சீரியல்களில் மிகவும் பிரபலமானது ‘செம்பருத்தி’ சீரியல். கார்த்திக் ராஜ், ஷாபனா, ப்ரியா ராமன், ஜனனி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த சீரியலில், மித்ரா என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் பரதா நாயுடு. ‘செம்பருத்தி’ சீரியலின் ஒளிப்பதிவாளரான அன்பு சமீபத்தில் காலமானார். அவரது மறைவுக்கு சீரியலில் நடித்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

சீரியலில் அரசியல்

இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் அன்புவின் மறைவுச் செய்தியை கேட்டு நடிகை பரதா நாயுடு அதிர்ந்து போனார். இதுதொடர்பாக கண்ணீர் மல்க உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்ட அவர், அதில் தனது மனக்குமுறல்களை கொட்டித் தீர்த்துள்ளார். அந்த வீடியோவில் பரதா நாயுடு கூறியிருப்பதாவது; ‘செம்பருத்தி’ சீரியலின் ஒளிப்பதிவாளர் அன்பு மரணச் செய்தி கேட்டு நொறுங்கிப் போனேன். எனது ஒன்றரை வருட செம்பருத்தி பயணத்தில் பல்வேறு அரசியலைச் சந்தித்தேன். உள்ளே பெரிய போர்க்களமே நடக்கும். அப்போது தனியாக இருந்தேன். இயக்குநரும், ஒளிப்பதிவாளரும் தான் எனக்கு உத்வேகம் அளித்துக்கொண்டே இருப்பார்கள். இவ்வாறு பரதா நாயுடு தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here