முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் இருவரையும் வைத்து ஒன்றாக படம் இயக்கப் போவதாக வெளிவந்த தகவல்களுக்கு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பதில் அளித்துள்ளார்.

ஹிட் படங்கள்

‘மாநகரம்’ திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்த அவர், அதனைத்தொடர்ந்து கார்த்தியை வைத்து ‘கைதி’ என்ற திரைப்படத்தை இயக்கினார். நீண்ட நாட்களாக வெற்றிக்காக காத்துக் கொண்டிருந்த கார்த்திக்கு, இப்படம் ஒரு பம்பர் பரிசாக அமைந்தது. ‘கைதி’ திரைப்படம் அதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல பெயரை பெற்றுத் தந்ததுடன், பல விருதுகளையும் குவித்தது. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, நடிகர் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார் லோகேஷ் கனகராஜ். மாளவிகா மோகனன் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார். கொரோனா பிரச்சனை காரணமாக ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவராமல் நிலுவையில் உள்ளது. திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்பதற்காக படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு ஒத்திவைத்துக் கொண்டே இருக்கிறது. ‘மாஸ்டர்’ திரைப்படம் வெளிவருவதற்கு முன்பே படத்தின் பாடல்கள் வெளியாகி, பெரிய அளவில் மெகா ஹிட்டானது. யூடியூப்பில் மிகப்பெரிய சாதனைகளை படைத்தது.

அவங்க ஓகேன்னா, நானும் ஓகே

‘மாஸ்டர்’ படத்தை தொடர்ந்து கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரையும் வைத்து லோகேஷ் கனகராஜ் புதிய திரைப்படம் ஒன்றை இயக்கப் போவதாக ஒரு செய்தி வெளிவந்தது. அதுபற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவராத நிலையில், தற்போது அப்படம் பற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மனம் திறந்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், ரஜினி, கமல் போன்ற முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்க வேண்டும் என்ற ஆசையில் தான் உள்ளேன். ஆனால் அந்தப் படத்தைப் பற்றி எந்த ஒரு தகவலும் இப்பொழுது என்னால் கூற முடியாது. முழுக்க முழுக்க தயாரிப்பு நிறுவனம் தான் முடிவெடுக்க வேண்டும். தயாரிப்பு நிறுவனம் முழுதாக சம்மதித்தால் கண்டிப்பாக அவர்கள் இருவரையும் வைத்து படம் இயக்குவேன். இவ்வாறு லோகேஷ் கனகராஜ் கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here