சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை நடிகை ஓவியா தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஓவியா கருத்து

களவானி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா, அதன்பின் பல படங்களில் நடித்தார். பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களில் ஒருசில கருத்துக்களை பதிவு செய்து வரும் ஓவியா, சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய வேண்டுமா? என்பது குறித்தும், போட்டியாளர்களின் மன அழுத்தத்தை பிக்பாஸ் நிர்வாகிகள் கண்டுகொள்ளாமல் இருப்பது குறித்தும் பதிவு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இந்த நிலையில் நேற்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டதையொட்டி, ’சுதந்திரம்’ குறித்து அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சுதந்திரம் என்பது கொடுக்கப்படுவது அல்ல, எடுக்கப்படுவது என்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கூறியதை ஓவியா குறிப்பிட்டுள்ளார். ஓவியாவின் இந்த கருத்துக்கு ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.

கேட்டுப் பெற வேண்டிய நிலை

இதநிடையே, சுதந்திரத்தை கேட்டுப் பெற வேண்டிய நிலையில்தான் இருக்கிறோம் என நடிகை நிவேதா பெத்துராஜ் தெரிவித்திருக்கிறார். வேலைக்கு செல்லும் பெண் திருமணம் செய்து கொண்டால், தொடர்ந்து அவள் வேலை செய்வதா அல்லது வேலையை விட்டுவிட வேண்டுமா? என்பதை அவளுடைய கணவர்தான் முடிவு செய்ய வேண்டிய நிலை உள்ளது. சில பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு புரியவைத்து, பிறகு அனுமதி பெற வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் என்று கூறியிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here