சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக மகேந்திர சிங் தோனி அறிவித்துள்ளது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நட்சத்திர வீரர்

இந்தியாவின் மிகவும் முக்கியமான கேப்டன்களில் ஒருவர் மகேந்திர சிங் தோனி. தல என்று தமிழ் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, சக போட்டியாளராக இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடி வந்தார். இந்திய அணியின் நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவது குறித்து கடந்த ஓராண்டாகவே பல்வேறு கருத்துகள் நிலவி வந்தன. இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அவர் இன்று அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஓய்வு அறிவிப்பு

இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோனி வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், “சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுகிறேன். இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு (ஆகஸ்ட் 15) 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்” என்று குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே டெஸ்ட் போட்டிகளில் இருந்து தோனி ஓய்வு பெற்றுள்ள நிலையில், இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here