விஜய்யையும், அவரது படத்தையும் பார்க்காமல் செல்வதாக டுவிட்டரில் பதிவிட்ட விஜய் ரசிகர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தீவிர விஜய் ரசிகர்

நடிகர் விஜய்க்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது படங்கள் ரிலீஸாகும் போது அதனை திருவிழா போல் கொண்டாடும் ரசிகர்கள், ஏழை – எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி வருகின்றனர். விஜய்யின் தீவிர ரசிகர்களில் ஒருவரான பாலா என்பவர், எப்பொழுதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். ஆனால் இவருக்கு குடும்பத்தில் சில பிரச்சனைகள் இருந்ததாக கூறப்படுகிறது. மிகுந்த மனவேதனையோடு காணபட்ட அவருக்கு, விஜய் ரசிகர்கள் பலர் ஆறுதல் கூறி வந்துள்ளனர்.

தற்கொலை

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் எந்த ஒரு பதிவையும் போடாமல் இருந்த பாலா, கடந்த 16 ஆம் தேதி, ‘மாஸ்டர்’ படத்தையும், விஜயையும் கடைசி வரை பார்க்காமலேயே செல்கிறேன் என டுவிட்டரில் ஒரு பதிவை வெளியிட்டார். இதனைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விஜய் ரசிகர்கள், அவரது வீட்டுக்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போது பாலா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்துள்ளது. பாலாவின் மரணச் செய்தி கேட்டு அவரது இணையதள நண்பர்களும், நடிகர் விஜய்யின் ரசிகர்களும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here