இளம் நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ்

நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தீவிரமாவதன் காரணத்தால் பொதுமக்கள், பிரபலங்கள் என பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் நாளுக்கு நாள் புதிய உச்சத்தைத் தொட்டு கொண்டிருக்கும் கொரோனா வைரஸால், பலி எண்ணிக்கையும் அதிகரித்து காணப்படுகிறது. இருப்பினும் குணமடைந்து வீடு திரும்போரின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களான அபிஷேக் பச்சன், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், அவரது மகள் ஆராத்யா என பச்சன் குடும்பமே கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகினர். பிறகு இயக்குநர் ராஜமௌலி மற்றும் அவரது குடும்பத்தினர் கொரோனா தொற்றுக்கு ஆளாகினர்.

நடிகைக்கு கொரோனா

எஸ்.பி. பாலசுப்ரமணியம், நடிகர் விஷால் உள்ளிட்ட தமிழ் திரையுலகினரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சமீபத்தில், பிரபல தயாரிப்பாளர் வி. சுவாமிநாதன், கொரோனா பாதிப்பால் மரணம் அடைந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த நிலையில், நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில்; ’கடந்த வாரம் மேற்கொண்ட பரிசோதனையில் எனக்கு கொரோனா தொற்று உறுதியானது. நான் இப்போது குணமடைந்து வருகிறேன். என்னை கவனித்துக்கொண்ட நெருங்கிய சொந்தங்களுக்கும், முன்கள சுகாதார ஊழியர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். குறிப்பாக தொடர்ந்து ஆதரவளித்த சென்னை மாநகராட்சிக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here