இயக்குநர் ஹரி, சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த ‘அருவா’ திரைப்படம் கைவிடப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகின்றன.

ஹிட் படங்கள்

இயக்குநர் ஹரி – சூர்யா கூட்டணியில் ஏற்கனவே உருவான ஆறு, வேல், சிங்கம் திரைப்படங்கள் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது. இதில் சிங்கம் திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. அதனைதொடர்ந்து இரண்டு மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளிவந்து நல்ல வசூல் பார்த்தது. இதனிடையே ஹரி – சூர்யா கூட்டணியில் ‘அருவா’ என்ற படம் உருவாக உள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன் அறிவிப்பு வெளியானது. ஞானவேல் ராஜா இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

கைவிடபட்டதா?

இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பை திட்டமிட்டபடி நடத்த முடியாததால், ‘அருவா’ படம் கைவிடப்பட்டதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. இருப்பினும் படக்குழு தரப்பிலிருந்து இதுதொடர்பான எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. கொரோனா அச்சுறுத்தல் முடிவுக்கு வந்த பிறகு சூர்யா, வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார். அதையடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here