அமலாக்கத்துறை விசாரணையின் போது தன்னிடம் இருக்கும் சுஷாந்தின் சொத்து இது ஒன்றுதான் என அவர் எழுதிய கடிதத்தை காண்பித்துள்ளார் நடிகை ரியா சக்ரபோர்த்தி.

பல மர்மங்கள்

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் கடந்த ஜூன் மாதம் மும்பையில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் மறைந்த நாள் முதல் இன்று வரை தினம் தினம் புதுப்புது தகவல்களும், புதுப்புது செய்திகளும் வெளிவந்த வண்ணம் உள்ளன. மும்பை போலீசார் விசாரித்து வந்த இந்த வழக்கு தற்போது சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சுஷாந்த் தற்கொலை தொடர்பாக அவரது நெருங்கிய நண்பர்கள், சினிமா இயக்குநர்கள், நடிகர், நடிகைகள் என பலரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். சுஷாந்த் மரணம் தொடர்ந்து சர்ச்சையில் இருப்பதாகவும், அவரது தற்கொலையில் மர்மம் இருப்பதாகும் சுஷாந்தின் தந்தை பீகார் போலீசில் புகார் அளித்தார். மேலும் சுஷாந்தின் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தி மீது சந்தேகம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்தப் புகார் தொடர்பாக பிகார் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது ஒன்றுதான்

சுஷாந்தின் வங்கிக் கணக்கில் இருந்து 15 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்துள்ளதை கண்டறிந்த போலீசார், அமலாக்கத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அமலாக்கத்துறையும் ரியா மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்தது. இதற்கிடையே தலைமறைவாக இருந்த ரியா சக்ரபோர்த்தி நேற்று முன்தினம் தனது சகோதரர் சௌத் சவுத்ரியுடன் இணைந்து அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு சென்றார். அங்கு அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் சுஷாந்த்தின் பிசினஸ் பார்ட்னராக இருந்தது தெரியவந்தது. மேலும் பணப் பரிமாற்றம் குறித்து கேள்வி எழுப்பட்டு, ரியாவின் பதில்கள் பதிவு செய்யப்பட்டன. பெரும்பாலான கேள்விகள் தனக்கு தொடர்பில்லாதவை என ரியா கூறியுள்ளார். ரியா குடும்பத்தின் சொத்து விவரங்கள் பற்றியும் கேள்விகளும் கேட்கப்பட்டுள்ளது. அப்போது ரியாவின் குடும்பத்தைப் பாராட்டி சுஷாந்த் எழுதிய கடித்தத்தை அவரது வழக்கறிஞர் சதீஷ் வெளியிட்டுள்ளார். இதனை குறிப்பிட்ட ரியா, சுஷாந்த்தின் சொத்து இது ஒன்றுதான் தன்னிடம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here