கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ஏர் இந்தியா விமானம் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

விபத்தில் சிக்கிய விமானம்

மத்திய அரசின் வந்தே பாரத் திட்டத்தின் கீழ் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் விமானம் மூலம் தாயகம் அழைத்து வரப்படுகின்றனர். அந்த வகையில் துபாயில் சிக்கித் தவித்த இந்தியர்கள் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் கேரள மாநிலத்திற்கு அழைத்து வரப்பட்டனர். 191 பேருடன் கோழிக்கோடு வந்த விமானம் தரையிறங்க முற்பட்ட போது, கனமழையின் காரணமாக தரை சறுக்கியதால் விபத்துக்குள்ளானது.

மீட்புப் பணி தீவிரம்

விபத்தில் சிக்கிய விமானம் இரண்டாக உடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து விரைந்து செயல்பட்ட மீட்பு குழுவினர், 24 ஆம்புலன்ஸ்கள் மூலம் விமான விபத்தில் சிக்கிய அனைவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கின்றனர். விமான விபத்தில் விமானி ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here