பிரபல நடிகை குஷ்புவிற்கு பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிறந்த நடிகை

1990களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அப்போதிலிருந்தே தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தையும், தனக்கென ஒரு கௌரவத்தையும் ஏற்படுத்தி நடிகையாக மட்டுமல்லாமல், அரசியலிலும் சாதித்து வருகிறார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து, தற்போதிருக்கும் ஹீரோக்களுடனும் குணச்சித்திர வேடத்தில் நடித்து வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகை குஷ்பு, சமூகத்தில் ஏற்படும் பிரச்சனைகளையும், பெண்களுக்கு ஏற்படும் துன்புறுத்தல்களையும் தைரியமாக பேசி பதிவிடுகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருக்கும் அவர், சமீபத்தில் தனது உடற்பயிற்சி மற்றும் யோகா செய்யும் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார். எப்பொழுதும் அவர் வெளியிடும் புகைப்படங்களுக்கும், பதிவுகளுக்கும் நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும். ஆனால் இந்த முறை அது தலை கீழாக மாறிவிட்டது.

பாலியல் மிரட்டல்

சில நாட்களாக தனக்கு செல்போனில் ஒரு நபர் பாலியல் வன்கொடுமை மிரட்டல் விடுத்து வருவதாக பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார் நடிகை குஷ்பு. இதுபற்றி, டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், அதில் பாலியல் மிரட்டல் விடுத்த நபரின் தொலைபேசி எண்ணையும் பதிவு செய்துள்ளார். தனக்கு மிரட்டல் விடுத்தவரின் பெயர் சஞ்சய் சர்மா என்றும் அவர் கொல்கத்தாவை சேர்ந்தவர் என்றும், இதுபற்றி கொல்கத்தா போலீஸ் விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும் கொல்கத்தா போலீஸூக்கும் அந்த டுவீட்டை டேக் செய்துள்ளார். எனக்கே இந்த மாதிரியான மிரட்டல்கள் வருகிறது என்றால் மற்ற பெண்களைப் பற்றி எண்ணிப் பாருங்கள் என்றும் நடிகை குஷ்பு கூறியுள்ளார். இதேபோல் மற்றொரு டுவீட்டை பதிவு செய்துள்ள குஷ்பு, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இதுபற்றி கவனிக்க வேன்டுமென கேட்டுக் கொண்டுள்ளார். குஷ்புவின் இந்த டுவீட்டை பார்த்த பலர் அவருக்கு ஆதரவாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் குஷ்புவின் பதிவுகள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here