தேவையானவை

பச்சரிசி -2 டம்ளர்

உளுந்து – 100 கிராம்

தேங்காய் துருவல் – 2 டம்ளர்

வெல்லம் – 1 1/2 டம்ளர் (தூளாக)

வெந்தயம் – 1 சிட்டிகை

உப்பு – 1 சிட்டிகை

ஏலக்காய்த்தூள் – சிறிதளவு

கடலை எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

பச்சரிசி, வெந்தயம் மற்றும் உளுந்து இவை மூன்றையும் சேர்த்து இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். அதன்பின் சிறிதளவு தண்ணீரை சேர்த்து மாவு தன்மையில் அரைத்துக் கொள்ளவும். பின்னர் தேங்காய்த் துருவல், வெல்லம், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து, பணியாரம் சமைக்கும் வாணலியில், தேவையாண அளவு எண்ணெய்யை சேர்த்து குறைவான அளவில் மாவை ஊற்றி, வெந்தபின் எடுத்தால் சுவையான தேங்காய் பணியாரம் தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here