கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நடிகர் அமிதாப் பச்சன் பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

கொரோனா தொற்று

பிரபல பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சனுக்கு கடந்த 11 ஆம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகளும், நடிகையுமான ஐஸ்வர்யா ராய், மகள் ஆராத்யா ஆகியோருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.  இதையடுத்து அவர்கள் அனைவரும் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

வீடு திரும்பினார் அமிதாப்

அமிதாப் பச்சன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அறிந்த ரசிகர்கள், அவர்கள் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டி பிரார்த்தனை செய்தனர். இதனிடையே, இரு தினங்களுக்கு முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய் அவரது மகள் ஆராத்யா ஆகியோர் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினர். இன்று அமிதாப் பச்சன் கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக அவரது மகன் அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here