நடிகை லட்சுமி ராமகிருஷ்ணனை சும்மா விடமாட்டேன் எனவும் இனி அவர் பஞ்சாயத்தே பண்ணக்கூடாது என்றும் நடிகை வனிதா தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சரமாரியாக திட்டிய வனிதா

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். இவர்களின் திருமணம் குறித்து நாளுக்கு நாள் பல சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. திரைப்பிரபலங்களும், நெட்டிசன்ஸூம் நடிகை வனிதாவிற்கு அறிவுரையும் அதேசமயம் கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர். நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி போன்றோர் கருத்து கூறிய நிலையில், தனது வாழ்க்கையில் யாரும் தலையிடக்கூடாது எனத் தடாலடியாக பதில் அளித்தார் வனிதா. இதனால், அவர்கள் மன்னிப்புக் கேட்டு விலகினர். இந்த நிலையில், யூடியூப் நேரலை ஒன்றில் லட்சுமி ராமகிருஷ்ணனும், வனிதாவும் பங்கேற்ற போது லட்சுமிராகிருஷ்ணனை வனிதா சரமாரியாக தாக்கிப் பேசினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய்ப் பரவியது.

வக்கீல் நோட்டீஸ்

வனிதா பேசியதைப் பார்த்து லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு ஆதரவாக டுவிட்டை போட்டார் நடிகை கஸ்தூரி. இதனைப் பார்த்துக் கடுப்பான வனிதா, கஸ்தூரியையும் ஒரு கை பார்த்தார். இதனிடையே வனிதா – பீட்டர் பால் திருமணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வீடியோ வெளியிட்டு வந்த சூர்யா தேவி என்பவருக்கும், வனிதாவுக்கும் வார்த்தைப் போர் மூண்டது. தன்னை அவதூறாக பேசியதாக கூறி சூர்யா தேவி, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவிந்தர் சந்திரசேகர் ஆகியோர் மீது வனிதா போலீஸில் புகார் அளித்தார். இதில் சூர்யா தேவியை மட்டும் போலீசார் கைது செய்து வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், நடிகை லட்சுமி ராமகிருஷ்ணும் அவரது கணவரும் குற்றவியல் மற்றும் உரிமையியல் சட்டத்தின் கீழ் வனிதா விஜயகுமாருக்கு நோட்டீஸ் அனுப்பினர். இந்த நோட்டீஸை தனது டுவிட்டரில் வெளியிட்ட நடிகை வனிதா, “என் தனிப்பட்ட வாழ்க்கையில் தேவை இல்லாமல் தலையிட்டு போலி நீதிபதியாக இருக்க முயலும் நல்ல மனம் கொண்ட சமூக ஆர்வலர், எனக்கு ரூ.1 கோடியே 25 லட்சம் தரவேண்டும் என்று வக்கீல் மூலம் மிரட்டுவதாக குற்றம்சாட்டினார்.

சும்மா விடமாட்டேன்

இதற்கிடையே, டுவிட்டர் பக்கத்தில் நெட்டிசன் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன் பற்றி சொன்னதற்கு நடிகை வனிதா காட்டமாகப் பதிலளித்துள்ளார். லட்சுமி ராமகிருஷ்ணனை நான் சும்மா விடமாட்டேன். இனி அவர் எந்த பஞ்சாயத்து நிகழ்ச்சிகளையும் மீண்டும் நடத்தக்கூடாது என்று ஆவேசமாகக் கூறியுள்ளார். இன்னொருவர் நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, நாஞ்சில் விஜயன் ஆகியோரின் விளையாட்டு முடிந்தது என்று கூறியுள்ளார். அதற்குப் பதில் அளித்துள்ள நடிகை வனிதா, அது விளையாட்டு இல்லை. அவர்கள் காமெடியர்கள் என்று கிண்டலாகக் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here