‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமடைந்த நடிகை ஆல்யா மானசா தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

காதல் திருமணம்

ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து, கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரியவந்தது.

குழந்தையை கொஞ்சும் ஆல்யா

இதனையடுத்து சமீபத்தில் ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார் ஆல்யா மானசா. அவர் எப்பொழுது தன் செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டாலும், முகம் தெரிவது இல்லை என்பதுதான் ரசிகர்களின் வருத்தம். குட்டிப் பாப்பாவின் முகம் தெரியும் வகையில் புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அன்பு கோரிக்கை விடுத்து வந்தனர். அதற்கு பிறகு குழந்தையின் முகம் தெரிவது போல நிறைய வீடியோக்கள் வெளியிட்டார் ஆலியா மானசா. அதனைப் பார்த்த ரசிகர்கள் ஏராளமான கமெண்ட்களை பதிவிட்டு வந்தனர். அதில் குட்டி சஞ்சீவ், குட்டி ஆல்யா, குட்டிபப்பு என்றும் கூறி வந்ததோடு, அந்த வீடியோவை பகிர்ந்தும் வந்தனர். வழக்கம் போல் தற்போதும் தனது மகளுடன் கொஞ்சி விளையாடுவது போன்ற புகைப்படங்களை ஆல்யா மானசா வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அனைவரும் லைக்ஸ்களை தட்டி விடுகின்றனர். மேலும் குழந்தை ஆல்யா போலவே அழகாக உள்ளதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

மீண்டும் இணையும் ஜோடி

தற்போது மீண்டும் ஆலியாவும், சஞ்சீவ்வும் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. லாக்டவுன் முழுமையாக முடிந்தவுடன் இதனைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் பல நாட்கள் கழித்து நடிப்பதால் ‘ராஜா ராணி’ சீரியல் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாகி உள்ளது. சீரியல் பற்றி ஆல்யாவோ அல்லது சஞ்சீவோ ஏதாவது ஒரு சின்ன தகவல்களை வெளியிடுவார்களா? என்று ரசிகர்கள் ஏதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here