காஞ்சிபுரம், திருவள்ளுர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இடி மின்னலுடன் கனமழை பெய்யும்

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூர், கோவை, நீலகிரி, வேலூர், தேனி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழையும், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் மழைக்கு வாய்ப்பு

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் செய்யூர், தலைஞாயிறு, திருப்பூண்டி பகுதிகளில் தலா 10 செ.மீ. மழையும், தாமரைப்பாக்கம், கொளப்பாக்கம் பகுதிகளில் தலா 9 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. தாம்பரம் வட்டாட்சியர் அலுவலகம், ஆத்தூர், தோவாலா ஆகிய பகுதிகளில் தலா 8 செ.மீ. மழையும், அம்பத்தூர், வேதாரண்யம், திருத்துறைப்பூண்டியில் தலா 7 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது. காரைக்கால், தருமபுரி, தம்மம்பட்டி, ஜெயங்கொண்டம் பகுதிகளில் தலா 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

தமிழக கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்றும், குமரிக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அப்பகுதிகளில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here