நடிகை வனிதா விவகாரத்தில் சர்ச்சைக்குள்ளான சூர்யா தேவிக்கும், அவரை விசாரித்த பெண் காவல் ஆய்வாளருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

வார்த்தைப் போர்

நடிகர் விஜயகுமாரின் மகள் வனிதா, பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை பீட்டர் பால் திருமணம் செய்துகொண்டதாக பீட்டரின் முதல் மனைவி எலிசபத் ஹெலன் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். தனது கணவர் தனக்கு வேண்டும் என எலிசபெத் திட்டவட்டமாக கூறினார். இதனிடையே, எலிசபத்திற்கு ஆதரவாகவும், வனிதாவுக்கு எதிராகவும், தன் பெயரில் தனி யூடியூப் சேனல் நடத்தி வரும் சூர்யா தேவி கருத்து தெரிவிக்கத் தொடங்கினார். வனிதாவுக்கும் எலிசபத்துக்குமான பிரச்சனை, பின்னர் சூர்யா தேவிக்கும் வனிதாவுக்குமான பிரச்சனையாக மாறியது. அவர்களுக்குள் வார்த்தைப் போர் மூண்டது.

கைது, விடுதலை

சூர்யா தேவி தன்னைப் பற்றி அவதுாறு பரப்புவதாக போரூர் காவல் நிலையத்தில் நடிகை வனிதா புகார் அளித்தார். அதேபோல் வனிதா மீது சூர்யா தேவியும் வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இருவரையும் சமரச பேச்சுவார்த்தைக்காக அழைத்தனர். 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் இருவரும் சமாதானமாக செல்லும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் சமாதானமாக செல்ல சூர்யாதேவி மறுத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வனிதா அளித்த கொலை மிரட்டல் புகாரின் அடிப்படையில் சூர்யா தேவியை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.

சூர்யா தேவிக்கு கொரோனா

சூர்யா தேவியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன்னதாக கடந்த 23ம் தேதி காவல் ஆய்வாளர் ரேணுகா தேவிக்கும், சூர்யா தேவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், காவல் ஆய்வாளர் மற்றும் சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரை கைது செய்த போது, காவல்நிலையத்தில் இருந்த நடிகை வனிதா மற்றும் காவலர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவல் ஆய்வாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், சூர்யா தேவி தனது வீட்டில் இருந்து மாயமாகிவிட்டார். மாநகராட்சி அதிகாரிகள் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது அவர் அங்கு இல்லாதது தெரியவந்துள்ளது.

சூர்யா தேவி மாயம்?

இதனிடையே, சூர்யா தேவி தலைமறைவாகிவிட்டதாக நடிகை வனிதா தனது டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், சூர்யா தேவியை காணவில்லை என்றும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதால் சுகாதாரத்துறையும், காவல்துறையும் அவரை தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனக்கு வரும் தொலைபேசி அழைப்புகளை ஏற்பதில்லை என்றும் இது அவருடைய பொறுப்பற்ற தன்மையை காட்டுவதாகவும் வனிதா அந்த பதிவில் தெரிவித்துள்ளார். கொரோனா பாதிப்புக்கு உள்ளான சூர்யா தேவியை மாநகராட்சி அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here