‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நடிகை ரட்சிதா மீண்டும் விஜய் டிவிக்கு திரும்பியுள்ளார்.

கொரோனா வைரஸ்

சீனாவின் வூகான் நகரில் உருவான கொரோனா வைரஸ் இன்று உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனாவின் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய – மாநில அரசுகள் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இருப்பினும் நோய்த் தொற்று பரவிக் கொண்டு தான் இருக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது சில தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கு காரணமாக சின்னத்திரை சீரியல்களின் படப்பிடிப்புகள் நடத்தப்படாததால், ஏராளமான தொழிலாளர்கள் வருவாய் இன்றி பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் சில நிபந்தனைகளுடன் சின்னத்திரை படப்பிடிப்புகளை தொடங்க அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, சில தினங்களாக அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

ரசிகர்கள் மகிழ்ச்சி

தமிழக அரசு விதித்துள்ள நிபந்தனைகளுக்கு உட்பட்டு சீரியலுக்கான படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், சில முன்னணி நடிகர், நடிகைகள் கொரோனா அச்சம் காரணமாக பங்கேற்காததால், பலர் சீரியல்களில் இருந்து வெளியேறினர். கடந்த ஜந்து மாதங்களாக பழைய சீரியல்களையே பார்த்து வந்த இல்லத்தரசிகளுக்கு, வருகிற 27 ஆம் தேதி முதல் விஜய் டிவியில் புதிய எப்பிசோடுகள் ஒளிபரப்ப உள்ளதாக வெளியான தகவல் மகிழ்ச்சியை தந்துள்ளது. ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’, ‘ஆயுத எழுத்து’, ‘பாரதி கண்ணம்மா’, ‘தேன்மொழி’ போன்ற சீரியல்கள் திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை மாலையிலிருந்து இரவு வரை ஒளிபரப்பபடும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ‘ஈரமான ரோஜாவே’, ‘சுந்தரி நீயும் சுந்தரன் நானும்’ போன்ற சீரியல்களை மதிய நேரத்தில் ஒளிப்பரப்ப உள்ளனர். இதனை தவிர்த்து ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் 2வது சீசன் துவங்கவுள்ளது. ‘பாக்கியலட்சுமி’ ஆகிய புதுதொடர்களும் வர இருக்கின்றன. ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலின் இரண்டாம் பாகம் உருவாக உள்ள நிலையில், இதில் மாயனாக மிர்ச்சி செந்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘சரவணன் மீனாட்சி’ தொடர் மூலம் பிரபலமான ரட்சிதா மகாலட்சுமி நடிக்க இருக்கிறார்.

மனம் கவர்ந்த நடிகை

‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் ரசிகர்களை தனது நடிப்பால் கவர்ந்தவர் ரட்சிதா. இவர் இதற்குமுன் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளார். ‘பிரிவோம் சந்திப்போம்’ என்ற தொடரில் நடிகர் தினேஷ் உடன் இணைந்து நடித்தார். அதன்பின் இருவருக்கும் காதல் மலர்ந்ததையடுத்து திருமணம் செய்துகொண்டனர். ‘சரவணன் மீனாட்சி’ சீசன் இரண்டு மற்றும் மூன்று ஹிட்டாக ரட்சிதா மிகவும் முக்கிய காரணம். அந்த வகையில், தற்போது ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலில் நடிக்கும் இவர் புதிய சாதனை படைப்பார் என நம்பப்படுகிறது. ரட்சிதா தினேஷ் உடன் நாச்சியார்புரம் சீரியலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here