சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

வெடிகுண்டு மிரட்டல்

‘தல’ என ரசிகர்களால் அழைக்கப்படும் நடிகர் அஜித், தமிழ்த் திரையுலகில் பெரும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளவர். தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அவர், தனது குடும்பத்துடன் சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள இல்லத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில், இன்று மதியம் சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட மர்ம நபர் ஒருவர், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் அஜித்தின் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துவிட்டு போனைத் துண்டித்துவிட்டார். உடனடியாக மேலதிகாரிகளுக்கு தகவல் அளித்த போலீசார், அஜித் வீட்டுக்கு சென்று வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் சோதனை மேற்கொண்டனர்.

பரபரப்பு

இதில் வெடிகுண்டு ஏதும் சிக்காததால், வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதனையடுத்து விசாரனை மேற்கொண்ட போலீசார், விழுப்புரத்தை சேர்ந்த நபர் தொலைபேசியில் அழைத்தது தெரியவந்தது. அவரைப் பிடிக்க விழுப்புரம் மாவட்ட போலீஸாருக்குத் தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த நபரை தேடி வருகின்றனர். நடிகர் அஜித் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில தினங்களுக்கு முன் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here