நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவது திருமணம் செய்துகொண்டதை அறிந்த அவரது முதல் கணவரின் மகன் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சை திருமணம்

கடந்த மாதம் 27ம் தேதி பீட்டர் பால் என்பவரை நடிகை வனிதா விஜயகுமார் மூன்றாவதாக திருமணம் செய்துகொண்டார். திருமணம் நடைபெற்ற நாளிலிருந்து இன்றுவரை வனிதா பேச்சுப்பொருளாக மாறிவிட்டார். சமூக வலைத்தளங்களில் வனிதாவை பற்றிய பேச்சு அதிகமாக உள்ளது. இது ஒருபுறம் இருக்க பீட்டர் பால் முறையாக விவாகரத்து கொடுக்காமல் வனிதாவை திருமணம் செய்துகொண்டதாக அவரது முதல் மனைவி போலீஸில் புகார் கொடுத்துள்ளார். தனது கணவர் தனக்கு வேண்டுமெனவும் அவர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

சர்ச்சையான புகைப்படங்கள்

இது ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க, தினமும் விதவிதமான புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு சர்ச்சையை கிளப்பினார் வனிதா. அதிலும் முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் அதிகம் இடம்பெற்றதால் அனைவரும் இவரைப் பற்றி தான் பேசிக் கொண்டிருக்கின்றனர். இவர்களது திருமணம் குறித்து நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சிக்க, நடிகைகள் லட்சுமி ராமகிருஷ்ணன், குட்டி பத்மினி என திரைப் பிரபலங்களும் விமர்சித்தனர். இதனால் ஆத்திரமடைந்த வனிதா விஜயகுமார், தன்னுடைய திருமணத்தை பற்றி பேச நீங்கள் யார் என்று கடுமையாக சாடினார். இதனால் இருவரும் தாங்கள் பேசியது தவறுதான் என மன்னிப்பு கேட்டனர். பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனும் வனிதாவின் திருமணம் குறித்து பேசியுள்ளார். வனிதாவின் திருமணம் சட்டப்படி நடைபெறவில்லை என்றும் எந்த சட்டமுறையும் பின்பற்றப்படவில்லை என்றும் கூறியிருந்தார். இதனை கடுமையாக விமர்சித்தார் வனிதா. தனது தனிப்பட்ட விஷயத்தில் யாரும் தலையிடக்கூடாது என்றும் தன் வாழ்க்கைப் பிரச்சனையை சமாளிக்க தனக்கு தெரியும் என்றும் பல கருத்துக்களை வெளியிட்டார்.

மன அழுத்தத்தில் மகன்

வனிதாவைப் பற்றிய பல செய்திகள் தினமும் வந்து கொண்டிருக்கும் நிலையில், அவரது முதல் கணவரான ஆகாஷ் பற்றிய தகவலும் வெளிவந்துள்ளது. வனிதாவிற்கும், ஆகாஷுக்கும் திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றுள்ளனர். மகன் அப்பாவிடமும், மகள் அம்மாவுடனும் இருக்க வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. இதனையடுத்து மகன் ஸ்ரீஹரி ஆகாஷுடன் வசித்து வருகிறார். தற்போது ஸ்ரீ ஹரிக்கு 23 வயது ஆகிறது. இந்த நிலையில், வனிதாவின் மூன்றாவது திருமண செய்தியை கேட்ட ஸ்ரீஹரியின் நண்பர்கள், அவருடன் பேசுவதையும், பழகுவதையும் குறைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் பெரும் மன உளைச்சலுக்கு ஆளான ஸ்ரீஹரி வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. வனிதாவின் இந்த திருமணம் அவருக்கு மட்டும் பிரச்சனையாக இல்லாமல் பிரிந்த கணவரின் குழந்தைகளுக்கும் பிரச்சனையாக இருப்பது பல தரப்பிலும் சர்ச்சையாக பேசப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here