சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் விஜய்யின் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெடிகுண்டு மிரட்டல்

தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவரான விஜய் பனையூரில் உள்ள பங்களாவில் வசித்து வருகிறார். அவருக்கு சாலிகிராமத்தில் இன்னொரு வீடு உள்ளது. இந்த வீட்டில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார், சாலிகிராமம் மற்றும் விருகம்பாக்கத்தில் உள்ள நடிகர் விஜய்க்கு சொந்தமான வீடுகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். மோப்பநாய் உதவியுடன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.  

ரசிகர்கள் அதிர்ச்சி

இந்த சோதனையின்போது வெடிகுண்டு எதுவும் சிக்காததால், இது வெறும் புரளி என தெரியவந்தது. இதனையடுத்து விசாரணை மேற்கொண்ட போலீசார், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தைச் சேர்ந்த புவனேஷ்வர் என்பதையும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதையும் கண்டுபிடித்தனர். இதனையடுத்து அவரது குடும்பத்தினருக்கு எச்சரிக்கை விடுத்த போலீசார், இனிமேல் இதுபோல் நடக்காமல் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினர். நடிகர் விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here